எத்துனை இ(து)ன்பம்

அன்றைய வேலையை அதற்கு முந்தய நள்ளிரவே தீர்மானித்து விட்டது. ”உன்னுடைய இயந்திரத்தில் தொந்தரவு. காலையில் வரவும்” என்ற வாடிக்கையாளரின் குறுந்தகவல் அடுத்த நாள் முழுவதையும் ஆக்கிரமிக்கக்கப் போவதை மின்னலான எண்ணத்தின் மூலம் உணர்ந்து கொண்டவனாய் தூங்கப்போனேன்.

கட்டுப்பாட்டு அறைக்கு(அலுவலகம்) போகாமல் நேரடியாக வாடிக்கையாளரின் இடத்துக்கு குறித்த நேரத்துக்கு புன்னகையோடு(!?) போய்ச்சேர்ந்தேன். பலியாட்டிற்கான முழுமரியாதையையும் கொடுத்து வேலையை பாழ்பண்ணும் இயந்திரத்திடம் அழைத்துச் சொன்றனர். இன்றைய பொழுது இயந்திரத்தோடுதானென்பது எனது கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. பின்னே தொந்தரவு என உணரப்பட்டதாவது தேவையான வெப்ப நிலைக்கு மிக மெல்லிய வேறுபாட்டோடு நிற்கும் இயந்திரத்தின் வெப்பமே.

இதை சரிசெய்ய பெரிய வேலையிருக்காது, ஆனால், இயந்திரத்தின் கணிணியோடு சின்னச்சின்ன பின்ன விளையாட்டுகளோடு விளைவுகளை கண்கொட்டாமல் கண்டபடியே இருக்கவேண்டும். சாதகமானால் ஆர்ப்பாட்டமாய் கைகுலுக்கி புன்னகையோடு விடைபெறலாம். பாதகமாகவே இருந்தால் சீன கெட்டவார்த்தைகளை பேசி, கேட்டு வரவேண்டியிருக்கும்.


பத்துமணிக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த ஃபைன் ட்யூனிங் பண்ணிரெண்டு மணிவரை கண்ணாமூச்சி விளையாட்டாகவே போனது. குறுக்கும், மறுக்குமாக (அ) மேலும், கீழுமாக (அ) எண்ணிக்கையை ஏற்றலும், இறக்கலுமாக ஏதேதோ செய்தும், ஆங்கிலத் தேர்வின் விடைத்தாள் போல பல்லிளித்துப் போனது.


மதியச் சாப்பாட்டிற்காக கால்கடுக்க நடந்து போய் உண்டாலும் உள்ளம் நிறையவில்லை. காரணம் தான் தெரியுமே. மீண்டுமொரு மின்னல் வேக நடையில் இயந்திரத்தை அடைந்து தோன்றிய யோசனைகளெயெல்லாம் அடுத்தடுத்து அமல்படுத்தியதில் மூன்றாம் யோசனையே கைகொடுத்தது. ஃபைன் டியூனிங் ஃபைனாக வேலை செய்ய ஆரம்பித்தது. அப்பாடா என்ற வார்த்தையையும் பெருமூச்சையும் விடுத்து மனம் நிம்மதியடையத் துவங்குகையில் தான் அடுத்த தொல்லையின் அத்யாயம் துவங்கியது.

செய்த மாற்றம் சரியாக வேலைசெய்கிறதா என முழு இயந்திரத்தையும் இரண்டு மணிநேரம் ஓட(?)விட்டு சரிபார்க்க வேண்டும். இயந்திரம் ஓடிக்கொண்டிருந்த ஒரு மணிநேரமும் அந்த அடர்ந்த இயந்திரக்காட்டில் வரைமுறைக்குட்பட்ட ஆனால் அயற்சியைக் கொடுக்கும் இரைசலினை உணரத் துவங்கினேன். எப்பவே கடந்து போகும் யாரோ ஒரு மனிதனைத் தவிர வேலையேதுமற்ற நிலையில், கட்டாயம் இருந்தே ஆகவேண்டிய சூழ்நிலையில், என்ன செய்வது?


சரியென்று மகிழ்ந்த இயந்திர பிழை திருத்தமே மனதிற்கு இம்சையாகிப் போனதே! அலப்பரையில்லாமல் அதுபாட்டுக்கு நல்ல(இயந்திர)பிள்ளையாக ஓடுகின்றது. எப்போதும் இடைக்கால வெற்றியை முழு வெற்றியென கொண்டாட முடியாததென்பதால் காலம் கடந்து போகும் வரை தனிமையை இரைச்சலோடு கொண்டாட வேண்டியிருந்ததே.

தனிமையில் எரிச்சல்படும் மனதிற்கு ஆறுதல் சொல்ல எதை அழைப்பது?, யாரை நாடுவது?

26 comments:

நட்புடன் ஜமால் said...

தொலைப்பேசி அனுமதி உண்டு தானே

அலைவரிசை கிடைக்கின்றது தானே ...

வேற எதுனா சொல்லனுமா ...

நட்புடன் ஜமால் said...

ஆங்கிலத் தேர்வின் விடைத்தாள் போல பல்லிளித்துப் போனது. ]]

இன்னும் அந்த உணர்வு அப்படியே இருக்கு போல

அப்பாவி முரு said...

//நட்புடன் ஜமால் said...
தொலைப்பேசி அனுமதி உண்டு தானே

அலைவரிசை கிடைக்கின்றது தானே ...//

திருத்தம், வாடிக்கையாளர் இடத்தில் கைபேசி அலைவரிசை கிடைக்காது. நீரோட்டம் பார்ப்பது போல் தேடிவேண்டியிருக்கும்.

அன்புடன் நான் said...

இத கூடவா பதிவா எழுதுவாங்க?...

சரி... உங்க கடைசி கேள்விக்கு... பதில்.....

மனதை திசைதிருப்பி.... வேறோரு புள்ளியில் சிந்தனையை (பழையக் காதல்... அல்லது பாழாப் போனக் காதல்) தொந்தரவுகளை உங்க மூளை உணராது செய்யலாம்.! எப்பூடி வைத்தியம்???

அன்புடன் நான் said...

மேல..... சிந்தனையை... நிலைநிறுத்தினா..... ந்ன்று சேர்த்து படிக்கவும்

கோவி.கண்ணன் said...

கவிதையை ரசித்தேன் :)

அன்புடன் நான் said...

மேல ந்ன்று என்பதை... என்று ...என்று படிக்கவும்

அன்புடன் நான் said...

அப்பாடா.... ஒரு கருத்துக்கே...இப்படி நாக்கு தள்ளுதே....

பழமைபேசி said...

இலக்கிய நடை.... வாழ்த்துகள்... எழுத்துப் பிழைகளைச் சரி செய்தால், இன்னும் நன்றாக இருக்கும்

vasu balaji said...

:). என்ன முரு? :))

ஜெகதீசன் said...

இத கூடவா பதிவா எழுதுவாங்க?...

புதுகை.அப்துல்லா said...

//எதை அழைப்பது?, யாரை நாடுவது? //

பேரரை அழைப்பது.நெப்போலியனை நாடுவது.

கோவி.கண்ணன் said...

//:). என்ன முரு? :))//

சாரு ன்னு இருக்கிறச்சே.....முருன்னு இருக்கப்படதா ?

:)

VIKNESHWARAN ADAKKALAM said...

அண்ணே வயித்துவலியா?

ஜோசப் பால்ராஜ் said...

இத கூடவா பதிவா எழுதுவாங்க?...

Unknown said...

//எதை அழைப்பது?, யாரை நாடுவது? //

பேரரை அழைப்பது.நெப்போலியனை நாடுவது. ..//

:-))

இராகவன் நைஜிரியா said...

கல்யாணம் ஆகப்போகுதா? இப்பவே இப்படி புலம்ப ஆரம்பிச்சுட்டீங்க.

கல்யாணம் ஆகட்டும்... இது போல சுகம் வேறு எதுவுமே கிடையாதுன்னு சொல்லுவீங்க.

priyamudanprabu said...

ஆங்கிலத் தேர்வின் விடைத்தாள் போல பல்லிளித்துப் போனது. ]]

இன்னும் அந்த உணர்வு அப்படியே இருக்கு போல

cheena (சீனா) said...

அப்து தம்பி அழகாச் சொல்றாருல்ல - நெப்போலியன நாடுறது தானே - அப்புறம் மெயிண்டனன்ஸ்லே இதெல்லாம் சகஜம் - கண்டுக்கக் கூடாது - வேப்பம் அதிகமாறதுக்கு - கூலிங் சரியில்ல - ஏசி எஃபெக்ட் பத்தாது அப்பிடி இப்பிடி ஏதாச்சும் சொல்லி அவன் தலைலே தூக்கிப் போடணும்

பாத்துக்கப்பா

பித்தனின் வாக்கு said...

என்னப்பா ஆச்சு, பையில்ல லோப்டாப் இருக்குல்ல ஒரு பதிவு போட்டு டிராப்டில் சேமிக்க வேண்டியதுதானே. நன்றி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))

ஆடுமாடு said...

லேபிள் நல்லாருந்தது... ஏதாவது எழுதணுமே?


உங்க பேர்ல ஒரு படம் வரப்போகுது.

பழமைபேசி said...

ஆகா...

thiyaa said...

super

அப்பாவி முரு said...

மாறுபட்ட விமர்சனங்கள்.,

ஆனால் அனைத்தையும் ஊக்கங்களாகவே எடுத்துக்கொள்கிறேன்.

எனவே இனி இதுமாதிரியான கட்டுரைகளும் வரும்...

நன்றி நண்பர்களே...

பித்தனின் வாக்கு said...

// எனவே இனி இதுமாதிரியான கட்டுரைகளும் வரும்... //
ஜயா நாங்க எல்லாம் குழந்தைப் புள்ளைக இப்படி எல்லாம் பூச்சாண்டி காட்டக் கூடது, அப்புறம் அழுதுருவேம். ஹா ஹா ஹா.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB