கை விலங்கு!?

(இந்த பதிவின் முதல் பாகத்தை http://abbaavi.blogspot.com/2009/02/blog-post_18.html -இல் படித்துவிட்டு தொடரவும்)

ஷ்… அப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே., ஏற்கனவே நம்மமேல பொகைஞ்சிட்டிருக்குறதுல கொஞ்சம் நெருப்பள்ளிப் போட்டுட்டு போறாரே மாமா என்ற கடுப்பிலும், மூணுபேத்துக்கு கத்திகுத்துண்ணாரே யாராயிருக்கும்? இப்ப எப்பிடி இருக்காணுங்களோ என்ற கவலையில் தூக்கம் வந்தும், வராமலும் புரண்டு படுத்தே விடியவைத்தாயிற்று.

காலை ஆறுமணிக்கில்லாம் கொல்லைக்குப் போவத்ற்க்காக சட்டை போடுவதைப் பார்த்து, ”எதுக்குடா வெளிய போற? உள்ளயே போகவேண்டியது தானே”, என்று கேட்ட அம்மாவிடம், “நம்ம காட்டுக்குத்தான் போறேன், இங்கிட்டுல்லாம் பிரச்சனையிருக்காது” எனக்கூறிய எனக்குத் தெரியாமலே விதி(சனி) என்னோடு விளையாட ஆரம்பித்தது.

வீட்டுல இருந்து வெளியே வந்து பார்த்தால், தெருமுக்கிலும் யாரும் இல்லை, டீக்கடையும் இல்லை. ”என்னடா இது, யாருகிட்டயாவது நிலவரத்தை கேக்கணும்னா ஒருத்தனையும் காணோம், ஆங்… எங்க இருந்தாலும் காலையில கொல்லைக்கு காட்டுக்குத்தான வரணும், அங்க வர்ரவன்கிட்ட கேட்டுக்கல்லாம்” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு ஊர் பாதையில் நடந்து வருகயில், மருந்து கம்பெனி வாசலில் ஒரு பொலீஸ்வேனின் பின்கதவு திறந்த நிலையில், உள்ளே இரண்டு பேர் கலர் சட்டை – காக்கி பேண்ட் போட்டு இருக்கையின் இருபுறமும் அமர்ந்திருந்தனர்.

“தம்பி, இங்க வாப்பா” என அன்யூனிபார்ம் பொலீஸ் என்னை சாஃப்ட்டாக கூப்பிட்டாலும், ”ஆஹா, வலைய விரிக்கிறாங்க, வாயக்குடுக்காம தப்பிக்கணும்” என்பதுபோல், யாரபத்தி கேட்டலும் தெரியாது, தெரியாதுண்னு சொல்லிட்டு வந்திடணும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டு வேன் பக்கத்தில் போனதும், அடுத்த போலீஸ் தடித்த குரலில் “வேன்ல ஏறுடா” என்றதும் குப்பென வியர்த்துவிட்டது.

“என்னய ஏன் சார் ஏறசொல்றீங்க, நான் டீசனுக்குப் போகணும்” என்று புளுகியதும், “டியுசனா? எத்திணாவது படிக்கிற?” எனக் கேட்ட சாஃப்ட் போலீசிடம், “பதிணொண்ணாவது எழுதியிருக்கேன், பண்ணெண்டாவதுக்கு டியுசன் போய்கிட்டு இருக்கேன்” என்றதும், ”டோய், ஊருக்குள்ள கலவரமாயிருக்கு, இன்னும் நாழு நாளைக்கு டியூசனுக்கெல்லாம் போகவேண்ட்டாம், ஒழுங்கா வீட்டுக்குப் போ, ஓடுரா” இது ரஃப் போலீஸ். அதுக்கு மேல நான் ஏன் அங்க நிக்கப் போறேன்.


மொத போணி மிஸ்ஸான கடுப்புல நம்ம ஸ்காட்லண்ட் யார்டு அந்த பக்கம் கக்காவுக்கு வந்த எல்லாரையும் வேன்ல ஏத்திட்டாங்க. அதுல எட்டாவதுல பெயிலானதால சேர் கம்பெனிக்கு வேலைக்கி போயிட்டு இருந்த மாப்பிள்ளை சுந்தரேசனும் மாட்டிகிட்டான். மாட்டுனவன் என்னா அழுதாலும் சரி, எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லையின்னு சொன்னாலும் சரி நம்ம ஸ்காட்லாண்ட் யார்டு வெளிய விடலயே, புல்லாயிட்டதால வண்டி கெளம்பிருச்சு .


வண்டியில இருந்த சுந்தரேசன் சும்மா இல்லாம, வழியில போன அவுங்கப்பாவைப் பார்த்து அழுதுகிட்டே கையைகாட்டவும், அவரு ஓடிவந்து வண்டியை மறிச்சு, “ஏன் சார் எம்மகனை கூட்டிகிட்டு போறீங்க” என்றவரை “மகனா? அதெல்லாம் சொல்லாத நீயும் ஏறு” –ன்னு அதட்டி கூட்டிட்டுப் போயி எல்லார் மேலயும் கலவரம் செஞ்சதா கேஸப் போட்டு, கோர்ட்ல ஆஜர் பண்ணி, கேள்வியே கேக்காம ரிமாண்டுல மதுரை ஜெயிலுல போட்டுடாங்க.

ரிமாண்டு முடிஞ்சு திண்டுக்கல் கோர்ட்க்கு, மதுரையில இருந்து வர்ரப்ப சுந்தரேசனுக்கும், அவுங்கப்பாவுக்கும் ஒரே கைவிலங்கு. திண்டுக்கல் பஸ்ஸாண்டுல இருந்து கோர்ட்க்கு போறவழியில தெரிஞ்சவுங்க யாராவது பாத்து, “யோவ், என்னய்யா மகன்கூட விலங்குமாட்டி கோர்ட்க்குப் போற, ஏதாவது கொலக்கேசா?” என்று கேட்டால் போச்சு, சுந்தரேசனின் அப்பா, சுந்தரேசனைப் பார்த்து “#@$%% ^&*^^$$ @$$%% ##$%^%&^ $#%$^^%(கெட்ட, கெட்ட வார்த்தையால் வாயிலேயே வயலின்), நீ மாட்டுனா, நீ பாட்டுக்கப் போகவேண்டியது தான்டா, ரோட்டுல போன என்னய கூப்பிட்டு என்னயையும் சேத்து மாட்டிவிட்டுடயே, இப்ப எல்லாரு என்ன கேக்குராய்ங்க பாரு” (ஒரு கையில் விலங்கிருப்பதால் அடிக்க முடியவில்லை).

இது மாதிரி மூன்று முறை மதுரைக்கும், திண்டுக்கலுக்கும் கைவிலங்கோடு அலைந்தப்பின், பெயிலுக்கு போட்டால் கிடைத்தது கண்டிஷன் பெயில், “கோயமுத்தூர் போலீஸ் ஸ்டேசனில் காலை பத்து மணிக்கும், மாலை ஆறு மணிக்கு இருவரும் ஒரு மாசம் கைழுத்து போடவேண்டும்”. (என்ன கொடுமை சார்?). வீட்டுல கூலி வேலை பாத்து சம்பாரிக்கிற ரெண்டு பேருமே செய்யாத ஒன்னுக்காக மாட்டி, நாப்பதஞ்சு நாள் ஜெயிலுல இருந்தது மட்டுமில்லாம, கண்டிஷன் பெயிலுக்காக கோயமுத்தூர்ல ரூம் மாதவாடகைக்கு எடுத்து வேலையேதும் செய்ய முடியாம, அந்த (ரிசர்வ் பேங்க் கவர்னர்)கையெழுத்தைப் போட்டு, ஒரு மாசம் கழிச்சு நார்மல் பெயில் கெடைச்சு, நாழு வருசம் கேசுக்காக அலைஞ்ச பின் “குற்றவாளியில்லை” என்ற தீர்ப்பிற்க்குப் பின் இப்போது சுந்தரேசன்(மனைவி + இரண்டு குழந்தைகளுடன்) நிம்மதியாக இருக்கிறார்.

ஆனால்,

அந்த கைவிலங்கு,
ஜெயில் குழாயில் தண்ணி வரவில்லையினாலும் சரி,
ரோட்டுல யாராவது பாத்து விசாரித்தாலும் சரி,
கோயமுத்தூர்ல சொந்தமா சமைச்சு சாப்பிடுறப்ப சாப்பாட்டுல உப்பு கம்மியா போனாலும் சரி,
‘!@#$#$ @#$$$# @#$&*&&* &^$$##%$ உன்னால தாண்டா இப்பிடி” என்று சுந்தரேசன் வாங்கிய திட்டுக்கள், காற்றோடு போகவேண்டியது தானா?

பின்குறிப்பு:-

என்னிடம் ’நாழு நாளைக்கு டியூசனுக்கு போகாத” என்று அந்த ரஃப் பொலீஸ் அங்கிள் சொன்னதால டியூசனுக்கு போகாமல் ஒருமாசம் கழித்து போனதும், “பாதி போர்சன் முடிச்சாச்சு, நீ வேர இடம் பாத்துக்க” என டியூசன் டீச்சரும் தொரத்திவிட்டுடாங்க. அப்புறம் எங்கப்பாவை கூப்பிட்டுப் போய் பஞ்சாயத்து பண்ணுனதுக்கப்புறம் ”பாதி பாடம் மட்டும்தான் நடத்துவேன்” –ன்னு சொல்லீட்டு சேத்துகிட்டாங்க. நானும் பண்ணெண்டாவதுல்ல பாதி மட்டும் தான் படிச்சேன்.

0 comments:

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB