அதிர்ச்சி தரும் வசனங்கள் (சமீபத்தில் கேட்டது, பார்த்தது மற்றும் பட்டது)

1) ஏண்டா டோய், ஓம்பொண்டாட்டிய பாக்காம என்னால இருக்க முடியுமாடா?
2) அவரு கையெழுத்தே போடவா?
3) தற்க்குறிகளை, தற்க்குறிகளாகத்தான் வச்சிருக்கணும்!.


1) ஏண்டா டோய், ஓம்பொண்டாட்டிய பாக்காம என்னால இருக்க முடியுமாடா?

இரண்டு குழந்தைகளுக்கு தாயான மனைவியை, க.காதலனோடு இருக்கும் தொடர்பை விட்டுவிடசொன்ன கணவனிடம், அடுத்த வந்த நாளில் வீட்டுக்கே வந்த க. காதலன் “யோவ், ஓம்பொண்டாட்டிகிட்ட என்னய பாக்கக் கூடாதுன்னு சொன்னயாமுல்ல, ஏண்டா டோய், ஓம்பொண்டாட்டியப் பாக்காம என்னால இருக்க முடியுமாடா? அதனால் இந்த மெரட்டுர வெலையெல்லாம் விட்டுடு, என்ன தெரியுதா?” – இது ஊரில் சமீபத்தில் நடந்த கசமுசா பிரச்சணையில் வீசப்பட்ட வாக்கியம்.

2) அவரு கைழுத்தைப் போடவா?

தம்பிக்கு D. D எடுக்க S. B. I -ன் கிளைக்கு சென்று வரிசை எண் எடுத்து காத்திருந்த நேரத்தில் திடிரென cash counter-இல் சிறு சப்தம், casher அக்கா- வரிசையில் இருந்த அக்காவிடம் “இல்லம்மா, அப்படியெல்லாம் செய்யக்கூடாது, எங்க அவரு?
வரிசை அக்கா “இல்லங்க, அவரால முடியாது(தொடைப் பகுதியை தொட்டுக் காண்பிக்கிறார்), அக்கவுண்ட் ஆரம்பிக்கிற அன்னைக்கி கூட கார்ல தான் கூட்டிட்டு வந்தோம்” உடனே casher அக்கா, “அப்படின்னா, நூறு லீப் இருக்குற செக் புக் வாங்கிக்கிங்க” என அவர்களின் பேச்சு போய்க்கொண்டிருந்தது. உடனே கவனத்தை தம்பியிடம் திருப்பி பேசிக்கொண்டிருக்கயில் மீண்டும் cash counter-பக்கம் சிறு சப்தம் வரவே, திரும்பினால், கேசியர் அக்கா ஒரு பெரிய லெட்ஜரை தூக்கி கையெழுத்து கேட்க்கவும், வந்த அக்கா “அவரு கையெழுத்தைப் போடவா?” என்று மிக சாதாரணமாக கேட்டார், கேசியர் அக்கா மிக, மிக சாதாரணமாக “இல்லை, இல்லை உங்க கையெழுத்தைப் போடுங்க” என்றார்.

அடுத்தவர் கையெழுத்தைப் போடுவதைப் பற்றி, ஒரு பேங்க்கில் அவர்கள் இருவரும் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்காங்க. வந்த அக்காவுக்கு அது தப்புன்னு தோணலை, கேசியர் அக்காவும் அது தப்புன்னு விளக்கம் சொல்லலை.

எனக்குத்தான் எட்டாவது படிக்கிறப்ப எங்கப்பாட்ட, அஞ்சு காசு சீட்டு அட்டையில என் நண்பன் பொய்யா கையெழுத்து போட்டதுக்கு அடிவாங்குனதும், ரெண்டு பாடத்துல பெயிலான ரேங்க் கார்டை கையெழுத்துக்கு நீட்டி அடிவாங்குனதும், ஏனோ ஞாபகத்துக்கு வந்தது.

3) தற்க்குறிகளை, தற்க்குறிகளாகத்தான் வச்சிருக்கணும்.

நாம மொத, மொத வேலை செஞ்ச இடத்துல கூட வேலை செஞ்சவரு, நமக்கு குருநாதர் மாதிரியான அண்ணனுடன், அபியும், நானும் படம் பாத்திட்டு, ரொம்ப மெதக்கமா, ”என்னமோ சார், படத்துல எல்லாமே சரியா, நிறைவா இருக்கு, ஆனால், திரிஷாவை மட்டும் தான் அந்த சின்ன பொண்ணு கேரக்டர்ல ஏத்துக்க முடியல, அதுக்கு காரணம் அந்த பிள்ளைய, பல படங்கள்ள, பல விதம்மா பாத்துட்டமா, அதனால ஒத்துக்க முடியல, உள்ள ஏதோ நெறடுது.” என்றேன். உடனே அவர், “அந்த கேரக்டருக்கு ஒரு புது சின்னபிள்ளையா போட்டிருந்தா உனக்கு ஏதும் தோணிருக்காது, நீயும் ஜொள்ளு விட்டுப் போயிருப்ப. திரிஷாவை ”அந்த” படத்துல பாத்த பாதிப்புல இருந்து நீ இன்னும் வெளியவல்லை, அதான் பிரச்சனையே! அதனால படத்துல ஒரு புதுபிள்ளையாப் போட்டு உன்னய மாதிரி தற்க்குறிகளை, தற்க்குறிகளாகத்தான் வச்சிருக்கணும், மாத்தி யோசிக்கிற மாதிரியெல்லாம் உங்களையெல்லாம் வைக்கவேக் கூடாது”
உச்சி தலையில ஆணியடிச்ச மாதிரி கிர்ருன்னு இருந்தது.

2 comments:

இராகவன் நைஜிரியா said...

100% sure

Me the first

இராகவன் நைஜிரியா said...

தலைப்பை படிச்சவுடனே ...

தமிழ் தொலைக்காட்சி மெகா சீரியலில் வரும் வசனங்களோ, அத வச்சு கிழி, கிழின்னு கிழிச்சு எழுதப் போறீங்கன்னு நினைச்சேன்.

கடைசியில எல்லாமே நிஜம் அப்படின்னு உடனே இன்னும் அதிகமாவெ ஆடிப் போயிட்டேன்

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB