பைத்தியங்கள்(தமிழர்கள்) ஒன்று சேர்வதில்லை

பைத்தியங்கள் ஒன்று சேர்வதில்லை - பழமொழி. இன்று அது தமிழர்களாகிய நமக்கு மிக மிக பொருந்தும்.

தமிழர்களால் கடந்த இருபது, முப்பது வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சனைகள் எத்தனை, எத்தனை.

காவேரி பிரச்சனை :-

தாய் காவேரி என்று பெருமையுடன் தமிழ்நாட்டில் அழைக்கப் படும் ஆறு, ஏழு மாவட்டங்களில் வாழ்வும், வளமுமாக மக்களுக்கு இரண்டாம் தாயாக இருந்த ஆறு. விவசாயம் மட்டுமின்றி தற்போது பல ஊர்களுக்கு குடிநீர் தேவையை தீர்த்துவைக்கும் ஆறு

கோடைகாலம் வந்தால் வழக்கம் போல, வரிசைகிரமம் தப்பாமல் சில காட்சிகள் நடைபெறும். எதிர்கட்சிகள் முதலில் கண்டனத்தை தெரிவித்து, தனியான உண்ணாவிரதம் இருப்பார், நடிகர்கள் தனியாக உண்ணாவிரதம், பேரணி, பேட்டி, ஆவேசபேச்சு பின்னர் மன்னிப்பு என படிபடியாக சூடு பிடிக்கும் பிரசனை, ஆளும்கட்சி அரசுமுறை பந்த்( விமானம் உட்பட)(வெளிநாடு, வெளிமாநிலத்திலிருந்து வரும் இழிச்சவாய் கூலி தமிழன், அவன் கலயாணத்திற்கு வந்தாலும் சரி- காரியத்துக்கு வந்தாலும் சரி Go Back தான்) ( அரசுமுறை பந்த் என்பது வெளியிலிருப்பவர்களை பாதிக்கவா இல்லை தமிழர்களை பாதிக்கவா என்று இதுவரை புரியவில்லை) நீதிமன்றம் குட்டினால், பின்னர் ஏதாவது செய்து தன்னுடைய இருப்பயையும் உறுதி செய்துவிடுவர். அவ்வளவுதான் காவிரி...

இலங்கை தமிழர் பிரச்சனை:-

இலங்கை வாழ் தமிழர், விடுதலை புலி என்று இலங்கை பிரச்சனையைப் பற்றி பேசவரவில்லை. இந்தியாவுக்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் பற்றிய பார்வை. அகதி தமிழர் தேசிய கட்சிகளுக்கு ஒரு பார்வை- மாநில காட்சிகளுக்கு ஒரு பார்வை, ஆளும் கட்சிக்கு ஒரு பார்வை- எதிர்கட்சிக்கு ஒரு பார்வை என யாருமே அவர்களை மனிதனாக பார்க்கவில்லை.மேலும் இலங்கை பிரச்சனயில் மத்திய அரசு அதை செய்ய வேண்டும், மாநில அரசு இதை செய்ய வேண்டும். நான் இதை செய்யப் போகிறேன் என தோள்கள் தினவெடுக்க பேசுபவர்கள் கூட ஏதும் செய்யவில்லை எனபதே உண்மை.

இலங்கையிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சிதறி ஓடிய தமிழ் மக்கள் இன்று பொருளாதாரத்திலும், சமூக அமைப்பிலும் பெரிய நிலைக்கு சென்றுவிட்டனர். ஆனால் இந்தியா வந்தவர்களின் நிலை...

முல்லை பெரியாறு:-

முல்லை பெரியாறு மத்திய தமிழ்நாட்டு மக்களின் விவசாய தேவை மட்டுமின்றி மதுரை மாநகர் மற்றும் பல ஊர்களுக்கு குடிநீருக்கும் வைகை ஆற்றை தான் நம்பிஉள்ளோம்.

தேனீ மாவட்ட மக்கள் வருடம் தவறாமல் நன்றி மரியாதையை செலுத்துவது பென்னி குயிக் என்பவரின் சிலைக்கு. யாரந்த பென்னி குயிக்? இந்த மக்களுக்கு மாமனா, மச்சானா? இல்லை ஏதேனும் ஜாதி சங்கத்தை ஆரம்பித்தவரா?

மலைகளின் மேலே வெள்ளை அரசுக்காக ஆணை கட்ட ஆரம்பித்து, ஏற்பட்ட பொருள் செலவால் வெள்ளை அரசு பின்வாங்க இங்கிலாந்தில் உள்ள தன் சொந்த உடமைகளை விற்று வந்த பணத்தில் இந்த பெரியாறு அணையை கட்டிமுடித்தார். ஏன் அவருக்கு இந்த ஆசை? அணைக்கு தன் பெயர் வைக்கவா? இல்லை அந்த பகுதியை வளைத்துப் போடவா? அந்த அணையை கட்டிமுடித்தால் மேற்கே பாய்ந்து வீணாகும் தண்ணீரை அணைகட்டி கிழக்கே தமிழ்நாட்டு பக்கம் திருப்பினால் இந்திய நாட்டிற்கே நல்லது என்ற பொது காரணத்தினால் அன்றி வேறென்ன!

இப்பொழுது புதிதாய் ஒக்கேனக்கல் பிரச்சனை.

இதெல்லாம் தீர்க்க முடியாத பிரச்சனைகளா? இல்லை தீர்க்க மனமில்லையா?

இங்கயே நம் தலைப்பை மீண்டும் பார்ப்போம், இந்தபிரச்சனைகள் தீர்க்க முடியாததுக்கு நாம் (இன, மத, மொழி, கட்சி, கொள்கை மற்றும் தலைமை மேல்) பைத்தியமாக இருப்பதும், அதனால் ஒருங்கிணையாமல் இருப்பதும் தானே அன்றி வேறென்ன.

ஈராயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே முறையான பாசனம் செய்தது, உலக நாகரீகங்களுக்கெல்லாம் இணையான தமிழ் நாகரீகத்தை உருவாகிய வைகை, காவிரி ஆற்றங்கரை இன்று ...

3 comments:

Anonymous said...

அட.... அறிவிழி பாணியில் ஆரம்பிச்சுட்டீங்களா... கலக்குங்க

பழமைபேசி said...

நல்லா எழுதிறீங்க! தமிழ் மணத்துல தெரிவிட விருப்பம் இல்லையா?
தகுதியான கட்டுரை, வாழ்த்துகள்!!

அப்பாவி முரு said...

பழமைபேசி கூறியது...
நல்லா எழுதிறீங்க! தமிழ் மணத்துல தெரிவிட விருப்பம் இல்லையா?
தகுதியான கட்டுரை, வாழ்த்துகள்!!


அண்ணே வாங்க.., கருத்துக்கு நன்றி. சீக்கிரம் சேரணும்.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB